2018ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பகாலம் இன்றுடன் நிறைவடைகிறது.
எனவே, விண்ணப்பிக்க அவசியமானவர்கள், தமது விண்ணப்பங்களை விரைவாக அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னரே, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான, வெட்டுபுள்ளிகளை வெளியிட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கொள்ளும் வெட்டுப்புள்ளிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment