யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
மல்வம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி குளிப்பதற்கு போவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதியை கானவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அன்றையதினமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரியதாஸ் ஜெயதாஸ் என்ற 55 வயதுடைய நபர் ஒருவருடன் குறித்த 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டநிலையில் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர்.
மரியதாஸ் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஒரு பிள்ளை திருமணமும் முடித்து விட்டார். குடும்பத் தகராறு காரணமாக குடும்பத்தை பிரிந்து, யுவதியின் வீட்டிற்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இதன்போது இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு கூறினர்.
இந்நிலையில் இருவரும் நேற்றையதினம் (07) மருதனார்மடத்துக்கு வந்தவேளை, குடும்பத்தினரால் அங்கிருந்து முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வீட்டுக்கு சென்றதும், யுவதியின் குடும்பத்தினரால் 55 வயது காதலன் அடித்து துவைக்கப்பட்டார். அங்குள்ள மரமொன்றில் அவர் கட்டி வைக்கப்பட்டு, உறவினர்கள் பலர் கூடி, அவரை துவைத்து எடுத்தனர்.
தகவலறிந்து பொலிசார் அங்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, அவரது உயிர் இடைவழியில் பிரிந்தது.
குடும்பத்தினரால் யுவதியும் கடுமையாக தாக்கப்பட்டார். அவரது கையில் பாதிப்பு ஏற்பட்டு, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தடயவியல் பொலிசார் இன்று விசாரணைகளை சம்பவ இடத்தில் மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment