வெளிநாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகள் என்ற போர்வையில் இலங்கைக்கு வரும் இளம் யுவதிகளும் வயதான பெண்களும் தமது பாலியல் தேவைகளுக்கு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள சிறுவர்களை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. 12 வயது தொடக்கம் 17 வயது வரையான சிறுவர்களை இவர்கள் இவ்வாறு பயன்படுத்தி வருகின்றனராம். இதற்காக இலங்கையில் உள்ள பிரபல விடுதிகள் சில முகவர்களைப் பயன்படுத்தி இவ்வாறான கேவலங்களைச் செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மிகவும் வறுமை நிலையில் உள்ள சிறுவர்களை விடுதிகளில் வேலை எனக் கூறி முகவர்கள் ஊடாக தென்பகுதி விடுதிகளுக்கு அழைத்துவந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பொலிசாருக்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கது உள்ளார்களாம்.
இவ்வாறா செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சிறுவர்கள் மதுபாவனை மற்றும் போதைப் பொருள்பாவனை போன்றவற்றிகும் அடிமையாகி உள்ளார்கள் எனவும் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment