சிறிலங்கா காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் | Sri Lanka Police Emergency Service Telephone 119 - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Saturday, August 5, 2023

சிறிலங்கா காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் | Sri Lanka Police Emergency Service Telephone 119



சிறிலங்கா காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

சிறிலங்கா காவல்துறையின் அவசர சேவை தொலைபேசி எண்ணான 119 எனும் எண்ணை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த அவசர இலக்கமானது 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும், நாளாந்தம் 3,000 முதல் 3,500 அழைப்புகள் வரை இதற்கு அழைப்பு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவுகளை ஆய்வு செய்த போது, சில நபர்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டறிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவசியமான தேவைக்கு மாத்திரம் 

இதுபோன்ற சம்பவங்கள் அவசர சேவை, அதிகாரிகள் அவசர சேவை மற்றும் அத்தியாவசியமான சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்களுக்கு இடையூறாக அமையும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அவசர மற்றும் அத்தியாவசியமான சம்பவங்கள் குறித்து முறைப்பாடு தெரிவிப்பதற்கு மாத்திரம் அவசர தொலைபேசி எண்ணை பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad