வீட்டு சுவாமியறையில் 2 வாள்களை வைத்திருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோண்டாவில் மேற்கு, புகையிரத நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து இளைஞன் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று மாலை 6 மணி அளவில் வீட்டை சோதனையிட்டு, சுவாமியறையில் வைக்கப்பட்டிருந்த 2 வாள்களையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞன், மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதான இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் கோண்டாவில் கிழக்கு ஐயப்பன் ஆலய வருடாந்த உற்சவத்தின் சமய சடங்குகளுக்காக மேற்படி வாள்களை கொள்வனவு செய்தது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment