உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயது பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி ( 30.12 ) இரணைமடுவில் உள்ள உறவினரிடம் சென்ற திரும்பிய பெண்ணுக்கு அன்றைய தினமே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மறுநாள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த ஏழாம் திகதி ( 07.01.) சிகிச்சை பெறச் சென்ற வேளையில் மயங்கி வீழந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதென தெரிவித்து சிகிச்சை வழங்கிய போதிலும், சிகிச்சை பயனின்றி கடந்த 13 ஆம் திகதி ( 13.01.) உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment