‘பெட்ரூம்ல தங்கி ஒண்ணுமே பண்ணல’: ஜெய் விளக்கம்! - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Monday, December 23, 2019

‘பெட்ரூம்ல தங்கி ஒண்ணுமே பண்ணல’: ஜெய் விளக்கம்!


நீண்ட நாட்களாகவே ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் ஊர் சுற்ற ஆரம்பித்தனர்.
படப்பிடிப்பின்போது இருவரது கொஞ்சல்கள் காரணமாக தயாரிப்பாளர் தரப்பு செம டென்ஷன் ஆன கதை அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட ஒரு தயாரிப்பாளர் பேட்டியில் இருவரும் ஒரே அறையில்தான் தங்குவார்கள் என மொத்த உண்மையை போட்டு உடைத்தார்.
மேலும் பெரிய நடிகர்களை போன்று ஜெய் எந்த பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவரது கேப்மாரி திரைப்படம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
கேப்மாரி பட புரமோஷனுக்கு மட்டும் வெளியில் வந்தது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அஞ்சலி பற்றி ஒரு பேட்டியில் ஜெய்யிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஜெய், எனக்கும் அஞ்சலிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இருவருக்கும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் கூட அஞ்சலியை திருமணம் செய்து கொள்ள வேண்டிய எந்த சூழ்நிலையும் ஏற்படாது எனவும் தங்களது தொடர்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இருந்தும் ஒரே அறையில் தங்கியது போன்ற கேள்விகளுக்கு சிரித்துக்கொண்டே மழுப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஜெய், நடிகை அதுல்யாவுடன் நெருங்கி பழகி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad