யாழ்.நகரில் 8 பேர் கொண்ட கும்பல் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம், வைமன் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராஜ் உரிமையாளர் நேற்று இரவு இரு முச்சக்கர வண்டிகளை வீட்டில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
அதிகாலை 1.55 மணியளவில், பாரிய சத்தம் கேட்ட போது, வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்துள்ளார்.
இதில் 8 பேர் முகமூடியுடன், மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதுடன், வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதை அவதானித்துள்ளார்.
இந்த நிலையில், இரு முச்சக்கரவண்டிகள் தீப் பற்றி எறிந்ததுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் வாளால் வெட்டப்பட்டும், வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தாம் எவருடனும் எந்த பிரச்சினைகளுக்கும் செல்வதில்லை என்றும், யார் இவ்வாறான சம்பவத்தை மேற்கொண்டுள்ளார் என்பதும் தெரியாது என வீட்டு உரிமையாளர் மேலும் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment