முல்லைத்தீவில் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Friday, January 4, 2019

முல்லைத்தீவில் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை


முல்லைத்தீவு, கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் வரையிலான களப்புப் பகுதியில் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டுவைக்கும் வகையில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மீனவர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு குற்றம் சுமத்துகின்றார், சென்.அன்ரனிஸ் மீனவர் சங்கத் தலைவர் வி.குமார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,கொக்­கு­ளா­யி­லி­ருந்து கொக்­குத்­தொ­டு­வாய் வரை­யி­ லான 9 கிலோ மீற்­றர் களப்பை நம்­பியே முல்­லைத் ­தீவு மாவட்­டத்­தின் கொக்­கு­ளாய், புளி­ய­முனை, கொக்­குத்­தொ­டு­வாய், கரு­நாட்­டக்­கேணி ஆகிய கிரா­மங்­க­ளைச் சேர்ந்த 450 குடும்­பங்­கள் வாழ்­கின்­றன. களப்­புப் பிர­தே­சத்­தில் இயந்­தி­ரப் படகோ ஒன்றே முக்­கால் இஞ்­சிக்­கும் குறை­வான வலை­களோ பாவிப்­பது சட்­டத்­துக்கு முர­ணா­னது.

களப்­புப் பகு­தி­யில் தற்­போது இறால், மீன் என்­பன பெருக்­கக்­கா­லம். தற்­போது எமது மீன­வர்­கள் சென்று வலை­களை விரித்து விட்டு வந்­தால், புல்­மோட்டை மீன­வர்­கள் நுழைந்து அறுத்­து­விட்டு தமது கூட்­டு­வ­லை­க­ளைப் பயன்­ப­டுத்தி தொழிலில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இந்­தச் செய­லால் எமது வாழ்­வா­தா­ர­மும் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. கடல்­வ­ள­மும் அழி­வ­டை­கின்­றது -– என்­றார்.

கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­களை இது தொடர்­பில் கேட்­ட­போது, நந்­திக்­க­ட­லில் கூட்­டு­வ­லைத் தொழி­லில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. சட்­ட­வி­ரோத தொழி­லில் ஈடு­பட்ட பலர் தப்­பி­யோ­டி­ய­போ­தும் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். 70 கூட்டு வலை­கள் கைப்­பற்­றப்­பட்­டன -– என்­றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad