பரபப்பான சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்து பேசவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து 113 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று காலை 8.30 மணியளவில் வருமாறு ஜனாதிபதி, ரணிலுக்கு அறிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment