இன்று காலை 8 .30 மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. Ranil Maithripala sirisena Meeting Cancelled
இது தொடர்பில் ரணிலை ஜானதிபதி செயலகம் வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் இந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. எனினும் இதற்குரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் இன்று பாராளுமன்றம் கூடும் போது மஹிந்த தரப்பினர் ஆளும் கட்சி ஆசனத்தில் அமர முன்னர் , அங்கு சென்ற அமர ஐக்கிய தேசிய கட்சியினர் முடிவு செய்து பாரளுமன்றம் நோக்கி விரைகின்றனர்.
இந்த தகவல்கள் ஐக்கிய தேசிய கட்சியை மேற்கோள் காட்டி வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment