பிரதமர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பையே ரணில் விக்கிரமசிங்கிற்கு வழங்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி பொலிஸ்மா வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த வேண்டுகோளினை, ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார தயாகமகே பாலித தேவப்பெரும ஆகியோர் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, அடங்கிய கடிதமொன்றினை அவர்கள் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு வழங்கியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர், சபாநாயகர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளார் இதன் காரணமாக பிரதமரிற்கு வழங்கப்படும் பாதுகாப்பை அவருக்கு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரும் 26-ம் தேதிக்கு முன்னர் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கும் அமைச்சர்களிற்கான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment