புலிகள் பற்றிய டுவிட்டர் பதிவை அவசர அவசரமாக அழித்த கருணா! - wintamila

Breaking

tamil news tamil news , tamil news , sri lanka news , tamil , video , lankasri tamil news , jaffna news, tamil cricket news , google tamil news

Post Top Ad

Post Top Ad

Wednesday, November 14, 2018

புலிகள் பற்றிய டுவிட்டர் பதிவை அவசர அவசரமாக அழித்த கருணா!


நேற்று பாராளுமன்றில் பெரும் அமளி துமளி நடந்து கொண்டிருந்த நேரம் , மஹிந்த ராஜபக்சவின் சரியும் செல்வாக்குக்கு முண்டு கொடுக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் தளபதியும் மஹிந்த ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில் பிரதி அமைச்சராக இருந்தவருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். Karuna Deleted Tweets Sri Lanka Tamil News Latest

கடந்த 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பால் கட்டுநாயக்கா விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தாக்குதல் என்றும் அந்த ஒப்பந்தத்தில் புலிகளுடன் ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கிய அரசியல் வாதிகளும் சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அந்த பதிவு இடம்பெற்று இருந்தது.

Karuna Latest Tweet

எனினும் சில மணி நேரங்களில் குறித்த பதிவுகள் அழிக்கப்பட்டு உள்ளது.

மஹிந்த தரப்புடன் முட்டி மோதி வரும் ரணில் தரப்புக்கு சேறு பூசும் வகையில் கருணா கூறியிருந்த அந்த கருத்து அவருக்கு எதிராகவே திரும்பும் சாத்தியம் இருந்த காரணத்தால் அவர் அந்த பதிவை அழித்து இருக்கலாம் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் பற்றிய உண்மைகளை அறிந்தவர் என்னும் வகையில் கருணா மீது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் பல தடவைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad