நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை பல கட்சிகளினதும் பிரதிநிதிகள் அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான, அண்மையில் மைத்திரி - மகிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை பெற்றுக் கொண்ட வியாழேந்திரன் புலப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் மகிந்தவின் பக்கம் உறங்கிய முகத்துடன் இருந்தார், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலும் அவர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
எனினும் வியாழேந்திரன் பிரதியமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட போது பல ஊடகங்களின் முக்கியச் செய்திகளில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று இருந்த இருந்த இடம் தெரியாமல் போன சோகக் கதை....
இதேவேளை இன்றைய தினம் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட இருவர் தமது அமைச்சுப் பதவிகளை துறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment