தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை காண எஸ்.வியாழேந்திரன் பதறியடித்து கொண்டிருப்பதான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
கூட்டமைப்பில் இணைய பலரின் ஊடாக முயற்சி செய்தும் அது வெற்றியளிக்காத நிலையில் ஆக குறைந்தது சம்பந்தனையாவது சந்தித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வியாழேந்திரன் உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
ஆபத்தான ஒரு இக்கட்டான அரசியல் சூழலில் மகிந்தவின் பணத்திற்காக விலைப்போன வியாழேந்திரன் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார் என்றும் இப்படியான ஒருவர் கூட்டமைப்புக்கு தேவை இல்லை என்றும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் இந்த நாட்டில் குழப்பகரமான நிலைமை இருந்து வருகின்றது. திடீரென பிரதமர் பதவி மகிந்தவிற்கு கொடுக்கப்பட்டு பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது.
பிரதமர் மாற்றப்பட்ட கையுடன் அடுத்தடுத்தாக அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்றைய தினம் இன்று மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 122பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகிந்த - மைத்திரியின் புதிய அமைச்சரவையும் களைக்கப்பட்டு விட்டதாகவே அரசியல் ஆர்வலர்களும் கருதுகின்றனர்.
இவ்வாறு ஒரு இக்கட்டான சூழலில் எஸ்.வியாழேந்திரன் மீண்டும் எப்படியாவது கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சம்பந்தனை சந்திப்பதற்கு துடித்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment